Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரமடை தனியார் பள்ளியில் புகுந்த அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பத்திரமாக மீட்பு

காரமடை, ஜூலை 23: காரமடை தனியார் பள்ளியில் புகுந்த அரிய வகை கோதுமை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காரமடை அருகே உள்ள தனியார் பள்ளியில் பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவுக்கு நேற்று தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஒயிட் பாபு தலைமையிலான குழுவினர் அங்கு பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை கண்டறிந்தார்.

தொடர்ந்து பாம்பு பிடிக்கும் உபகரணங்களுடன் நீண்ட நேரம் போராடி மாடியின் அடியில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீளமுள்ள அரிய வகையை சேர்ந்த கொடிய விஷமுள்ள கோதுமை நாகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிபட்ட பாம்பை காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து பாம்பு காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.