சிவகங்கை ஆக. 30: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (53). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டில் ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷிற்கு 12ஆண்டு சிறை தண்டன, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழுப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்
+
Advertisement