ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளது. இங்கு இறந்த நிலையில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார் தீயனைப்புத்துறை வீரர்களின் உதவியோடு உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த சிவக்குமார் என்பதும், இவர் தனியார் ஹோட்டலில் பாதுகாவலராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகர் பி1 காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். .
+
Advertisement