திருவாடானை, அக். 10: திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (57). விவசாயியான இவர் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் டிவி பார்ப்பதற்காக மின் வயரை எடுத்து சுவிட்ச் பாக்ஸில் சொருகியுள்ளார். அப்போது திடீரென அவரது உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாடானை போலீசார் மின்சாரம் தாக்கி இறந்த வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement