Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முளைப்பாரி ஊர்வலம்

சாயல்குடி, செப்.2: கடலாடி இந்திரா நகர் சந்தனமாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை துவங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர்.

திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து இரவில் உற்சவ அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் முளைப்பாரியை பெண்கள் கடலாடியின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து குளத்தில் கரைத்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.