Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுக்கோட்டை, அக்.8: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையாக கொண்டு செயல்படும் ஊர்க்காவல் படையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தன்னார்வ தொண்டு உள்ளம் படைத்த ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியுடையவர்கள் இன்று (8ம் தேதி) முதல் 13ம் தேதி வரை 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பின்புறம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் வரலாம். தகுதிகள் :பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் வயது: 20 வயது நிறைவடைந்தும் முதல் 45 வயது நிறைவடையாமலும் இருக்க வேண்டும்.

உடற்தகுதிகள் - காவல் துறை போன்றது. தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரிய படித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தகவலை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.