Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விராலிமலை அருகே மயங்கி விழுந்து கூலி தொழிலாளி பலி

விராலிமலை, நவ.7: விராலிமலை அருகே மயங்கி விழுந்த கூலி தொழிலாளி பலியானார். விராலிமலையில் வீட்டில் மயங்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விராலிமலை கார்கில் நகரை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் ரமேஷ் (36) கூலி தொழிலாளியான இவர் கடந்த 4ம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் ரமேஷ் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.