Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

புதுக்கோட்டை, ஆக.7: பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும், ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில்; பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

மேற்படி, முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளுக்கு முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம். இம்மாவட்டத்தில், உள்ள திருநங்கைகளும் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம்,

முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை முகாமில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என்பதையும், மேலும், பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்;கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 - இன் படி தெரிவித்தும் பயன்பெறலாம்.இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.