புதுக்கோட்டை, அக். 4: புதுக்கோட்டையில், பைக் மீது கார் மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பலியானார். புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் கருப்பையா, ( 46) இவரது மகள் கல்பனா (10), மகன் பாலமுருகன் (12) ஆகிய மூவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பாலன் நகரிலிருந்து பெருங்களுருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, முள்ளுர் பகுதியில் சாலையை கடக்கும் போது, இவர்களுக்கு எதிரே வந்த கார் மோதியதில் சிறுமி கல்பனா உட்பட பைக்கில் சென்ற மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிறுமி கல்பனா மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், பைக்கில் சென்ற தந்தை, மகன் ஆகிய இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தர்மபாண்டி (21) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.