Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்ற கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபதாரம் விதித்து மீண்டும் இது போன்று மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல 3-ம் வீதி உள்ள மீன் மார்க்கெட், டி.வி.எஸ் பகுதியில் உள்ள மீன் கடைகள் என பல்வேறு இடங்களில் அதிக அளவில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கெட்டுப்போன மீன்களை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என புதுக்கோட்டை மாநகராட்சி, மீன்வளத்துறை, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்படி நேற்று மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் புதுக்கோட்டை மீன் மார்க்கெட் மற்றும் டி.வி.எஸ் பகுதியில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு முன்பே மருந்தை ஊற்றி மீன்களை அழித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த ஆய்வின் போது 350 கிலோ எடை கொண்ட கெட்டுப் போன மீன்கள் அழிக்கப்பட்டன. கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இது போன்று மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். அதிகாரிகளின் இந்த நவடிக்கையால் புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.