Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி, மே 29: அரவக்குறிச்சியில் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் நேற்று சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் அக்னி வெயில் காரணமாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதக்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் நிம்மதியடைந்தனர். நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணி முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், சாலையில் நனைந்தபடி சென்றனர். கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் அரவக்குறிச்சியில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.