கொள்ளிடம், ஆக. 27: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லநாயக புரம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவடமலை மனைவி பட்டு (80). இவர் நேற்று கொள்ளிடம் அருகே புத்தூர் குமிளங்காடு நாகாத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிறுத்தத்தில் நின்றது.
பஸ்ஸில் ஏறுவதற்கு சாலையை கடந்து வந்த போது, பஸ்ஸின் இடது முன்பக்க பகுதி மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி பட்டு கீழே விழுந்து தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் . இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.