Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தனியார் டயர் தொழிற்சாலை மீது நடவடிக்கை சிஐடியு மனு

பெரம்பலூர், அக்.14: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் சிஐடியு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இதில், சிஐடியு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலையில் நடைபெறும் சட்டவிரோத உற்பத்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பெரம்பலூர் நகரில் நீர்நிலை பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் அனுமதி வழங்கிய துறை அலுவலர்கள் மீதும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தொழுநோய் சர்வே செய்த பணிக்காக தொகை முறைகேடு செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்திடக் கோரி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் மிருணாளியிடம், இந்திய தொழிற்சங்க மையம் பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பாக மனு அளிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, குணசேகரன், பன்னீர்செல்வம், ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.