ஜெயங்கொண்டம், ஆக.7: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, வரதராஜன்பேட்டையில் நடைபெற்று வரும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை, எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முகாமை பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, வட்டாட்சியர் இராஜமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரபீக், பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்த்தர்,பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், வரதராஜன்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.