Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேலப்புலியூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பெரம்பலூர், ஆக.6: பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் நேற்று (05ஆம் தேதி) புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொது மக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல்,

பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்டக் கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்புகளை சிறு புகைப்படக் கண்காட்சிகளாகவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி மேலப்புலியூர் ஊராட்சியில் நடத்தப்பட்டது.

இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப் படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்டக் கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன இந்த புகைப் படக் கண்காட்சியினை சுமார் 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.