குன்னம், நவ. 5: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்தார். மங்களமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர்,
திருவளாந்துரை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், லப்பைகுடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, பரவாய். கிழுமத்தூர், எழுமூர் ஆகிய பகுதிகளில் நாளை (6ம் தேதி) காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என லப்பைகுடிகாடு உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
