Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 383 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் அருண்ராஜ் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9லட்சம் மதிப்பிலான சாலை விபத்து நிவாரண உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.45ஆயிரம் மதிப்பிலான இயற்கை மரண உதவித்தெகையும், 3 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 11 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, 1 பயனாளிக்கு முதல் திருமணச் சான்றும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான மருத்துவ கல்வி உதவித்தொகை, 1 பயனாளிக்கு ரூ.2,05,000 மதிப்பிலான விபத்து மரண உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.55,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,200 ஓய்வூதியத்திற்கான ஆணையினை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,359 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு ரூ1,796 மதிப்பிலான ஊன்று கோல் (ஆக்ஸிலரி கிரட்சஸ்), 2 பயனாளிகளுக்கு ரூ.3,285மதிப்பிலான காதொலி கருவி என மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தில் பூலாம்பாடியைச் சேர்ந்த சௌந்தராஜன் தனது காதுகேளாத மாற்றுத் திறனாளி குழந்தை சபரி வாணிக்கு காதொலிக் கருவிகேட்டு விண்ணிப்பித்திருந்த நிலையில் மூன்றே நாட்களில் மனு மீது தீர்வு காணப்பட்டு அந்த மாணவிக்கு நேற்று காதொலிக் கருவியை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த கலெக்டர் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட் உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, முதியோர், ஆதரவற்றோர், விதவை உள்ளிட்ட உதவித் தொகை, தொழில் கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்டக் கலெக்டக் கலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 383 மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வராண்டாவில் மாற்றுத் திறனாளிகள் அமர வைக்கப் பட்டிருந்த இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.