தா.பழூர், செப்.24: விக்கிரமங்கலம் அருகே சாலையை திடீரென குறுக்கிட்ட நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்லக்கண்ணு(65), விவசாயி. இவர், தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின் காரணமாக வி.கைகாட்டி சென்று விட்டு மீண்டும் நாகமங்கலம் வந்துள்ளார்.
அப்போது, அய்யனார் கோயில் அருகே திடீரென நாய் சாலையை குறுக்கிட்டபோது, மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைதடுமாறி கீழேவிழுந்துள்ளது.
இதில், செல்லக்கண்ணுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு, அங்கிருந்தவர்கள் செல்லக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த செல்லக்கண்ணு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசில் செல்லக்கண்ணு மகன் மோகன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.