Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5வது சுற்று கோமாரிநோய் தடுப்பூசி பணி

பெரம்பலூர், ஜூன் 8: பெரம்பலூர் மாவட்டத்தில் 5வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் நாளை மறுநாள் 10ம் தேதிமுதல் 21நாட்கள் நடை பெறவுள்ளதால் விவசாயி கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளைத் தாக்கும் கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 5ஆவது சுற்றாக பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள 1,20,000 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால் நடை பராமரிப்புத் துறை யால், குழுக்கள் அமைக்கப் பெற்று நாளை மறுநாள் 10 ஆம்தேதி முதல் 21 நாட்கள் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள் பேரூராட் சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் முழுவதும் இலவசமாக நடைபெறும்.

எனவே, அனைத்து கால் நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாத வயதிற்கு மேலுள்ள கன்றுக் குட்டிகளுக்கும் மற்றும் கறவை மாடுகள், எருதுகள், காளைகள், எரு மையினங்கள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடு களுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப் பூசி போட்டு கொண்டு விவ சாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெற வேண்டும் என மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார்.