Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூதாட்டி வீட்டை உடைத்த காட்டு யானை

கூடலூர், செப். 3: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூற்றுபாறை 5ம் நம்பர் பாடி பகுதியில் வசிப்பவர் மணிமேகலை. இவர் வசிக்கும் வீட்டை ஒட்டி கடந்த சில தினங்களாக யானை ஒன்று வந்துள்ளது. யானை நடமாட்டம் காரணமாக உயிர் பயத்தில் மணிமேகலை அருகில் உள்ள உறவினர் வீட்டில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவில் உறங்க சென்றுள்ளார்.

நேற்றுகாலை வீட்டிற்கு வந்து பார்க்கும் போது யானையால் வீடு உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.