Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பார்சிலி உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி, நவ. 19: நீலகிாி மாவட்டத்தின் முக்கிய மற்றும் பிரதான தொழில் தேயிலை விவசாயம் ஆகும். இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற மலை காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் ப்ரஷ்ஷாக காய்கறி கிடைப்பதால் அவற்றை வாங்கி செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நட்சத்திர ஓட்டல்களில் உயர்தர சூப் தயாரிக்க பயன்படும் பார்சிலி எனப்படும் கீரை பயிாிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தவிர காலி பிளவர் வகையை சேர்ந்த புரூக்கோலி மற்றும் சைனீஸ் கேபேஜ் உள்ளிட்டவைகளும் பயிரிடப்பட்டு வருகின்றன. கட்டுப்படியாக கூடிய அளவிற்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.