பந்தலூர், அக்,8: பந்தலூரில் வசித்து வருபவர் முகம்மது. இவரது மகன் முகமது சாக்கிர் வயது (24), இவர் நேற்று முன்தினம் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் முற்றி தந்தையை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முகம்மது சக்கிரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+
Advertisement