பந்தலூர், செப். 9: பந்தலூர் அருகே ஏலமன்னா அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமார் (38). இவர், நேற்று முன்தினம் அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். போலீசார் அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.