Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரி கார்ட்டில் பைக் மோதி பனியன் தொழிலாளி பலி

அவிநாசி,ஆக.18:அவிநாசியில் நண்பருடன் பைக்கில் சென்றபோது பேரி கார்ட்டில் மோதிய விபத்தில் பனியன் தொழிலாளி உயிரிழந்தார். திரிபுராவை சேர்ந்தவர் அஜய் ரூபிதாஸ் (26). பனியன் தொழிலாளி. இவரது மனைவி சோபிதா (24). இவர்கள் அவிநாசி ரங்காநகரில் வசித்து வசித்தனர். நேற்று தனது நண்பர் ஜோய்சக்மா (28) என்பவரை அழைத்துக்கொண்டு அஜய் ரூபிதாஸ் பைக்கில் புறப்பட்டார்.

பெருமாநல்லூர் ரோட்டில் அவிநாசி ராஜன்நகர் கூட்டுறவு சொசைட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது பைக் பேரி கார்டு மீது மோதியதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் அஜய் ரூபிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த அவரது நண்பர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.