திருச்செங்கோடு, அக்.31: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில், முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு மருத்துவ உதவி மற்றும் உணவு தரப்பட்டது. முதியவருக்கு சுமார் 80 வயதிருக்கும். பசி மயக்கத்தில் அவர் மயங்கியது தெரியவந்தது. அவரிடம் இருந்த பையில் ரூ.2 ஆயிரம் ரொக்கமும், சேலம்- திருச்செங்கோடு, திருச்செங்கோடு, குமரமங்கலம் சென்ற பஸ் டிக்ெகட்டும் இருந்தது. அவர் தற்போது பராமரிக்கும் கரங்கள் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பற்றிய விபரம் அறிந்தவர்கள், காவல் நிலையத்திற்கு தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
+
Advertisement 
 
  
  
  
   
