Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண்ணை தாக்கிய விவசாயி கைது

மல்லசமுத்திரம், நவ.13: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் கிராமம், கரட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (39), விவசாயி. திருமணம் ஆகாதவர். இவருக்கும், பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரவி (49), அவரது மனைவி கோகிலா (45) என்பவருக்கும் இடையே, கடந்த பல வருடமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி வழக்கம் போல், இரு தரப்பிற்கும் வாய்க்கால் தகராறு ஏற்பட்டது. அப்போது, சரவணன், கோகிலாவை பலமாக தாக்கினார். இதில் கோகிலா தலையில் பலத்த காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த புகாரின் பேரில், எலச்சிபாளையம் போலீசார் நேற்று சரவணனை கைது செய்து, திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.