பரமத்திவேலூர், டிச. 5: பரமத்திவேலூரை அடுத்த வில்லிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48), விவசாயி. இவரது மனைவி நர்மதா. இவர்களுக்கு 6வயதில் ஒரு மகன் உள்ளான். சதீஷ்குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவரிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டில் இருந்த சதீஷ்குமார் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சதீஷ்குமாரின் தாய் அளித்த புகாரின் பேரில், பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

