Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊராட்சி செயலரிடம் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்செங்கோடு, ஜூலை 9: திருச்செங்கோடு அடுத்த டி.கைலாசம்பாளையம் பகுதியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தனித்தனியாக மனுக்களை வழங்கினர். தங்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், முழுமையாக வேலை வழங்க வலியுறுத்தியும், குறைவான நாட்கள் வேலை கொடுத்தால், மீதமுள்ள நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் கேட்டனர். இதுகுறித்து ஜெயராமன் கூறுகையில், ‘ஒன்றிய அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்குவதில்லை. ₹210 கோடி நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தியும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்க கூறியும், 3 நாட்கள் ஊராட்சி செயலாளர்களிடம் மனு வழங்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். 100 நாட்கள் வேலை வழங்காத பட்சத்தில், நிவாரணம் வழங்க வேண்டும்,’ என்றார்.