மல்லசமுத்திரம், ஜூலை 24: மல்லசமுத்திரம் வட்டார ஒருங்கிணைந்த வேளான் விரிவாக்க மையத்தில், அட்மா திட்டத்தின் கீழ், ரசாயன உரங்கள் பயன்பாடு குறைப்பு மற்றும் சமச்சீர் உரமிடுதல் பற்றிய விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேண்ண்மை துணை இயக்குநர் கோவிந்தசாமி, திருச்செங்கொடு நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சந்திரசேகரன் உரமிடுதல் மற்றும் பயிரிடுதல், ரசாயன உரங்களின் பயன்களை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்து பயன்பெறுதல் பற்றி விளக்கமளிந்தார்.
+
Advertisement