Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் பலி

திருச்செங்கோடு, அக். 12: திருச்செங்கோடு ஒன்றியம், புதுப்பாளையம் விஸ்வம் நகரை சேர்ந்தவர் பழனியம்மாள்(43). இவரது கணவர் சீனிவாசன்(47), எலக்ட்ரீசியன். சீனிவாசன் நேற்று தனது டூவீலரில், திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி நோக்கி சென்றுள்ளார். பால்மடை பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியின் வேன் டூவீலரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரான ஜீவா நகரை சேர்ந்த திருமூர்த்தி(28) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.