நாகப்பட்டினம், ஆக.27: நாகப்பட்டினம் நகர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் கலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகர பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பயன் அடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் நேற்று முதல்வரால் தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அழகர் மேல வீதியில் உள்ள சி எஸ் ஐ தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, எம் எல் ஏ முகம்மது ஷாநவாஸ், நகராட்சி ஆணையர் லீனாசைமன் ஆகியோர் தொடங்கி வைத்தார். நகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 12 அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தனர்.