வேதாரண்யம், செப். 17: வேதாரண்யம் தாலுகா நெய் விளக்கு நான்கு ரோடு திருவாசக்குளத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்துள்ளார் இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பிணத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவர் சைக்கிளில் வந்தாக தெரிய வருகிறது. இறந்தவர் எந்த ஊர், எப்படி இறந்தார், என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement