நாகப்பட்டினம், ஆக.6: நாகப்பட்டினம் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2025ம் ஆண்டின் சேர்க்கையில் காலியிடங்கள் உள்ள தொழிற்பிரிவுகளில் சேர நேரடி சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு வரும் பொழுது கைபேசி, இ-ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதி சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.