Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திட்டச்சேரியில் குளத்தில் தவறி விழுந்து முதியவர் பலி

கீழ்வேளூர், ஆக. 5: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை நாகூர் சாலை பகுதி சேர்ந்தவர் அப்துல் ஹமீது(75). இவர் நேற்று முன்தினம் காலை குளிப்பதற்காக ப.கொந்தகை பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அப்துல் ஹமீதை தேடி சென்றுள்ளனர். அப்போது குளத்தில் தவறி விழுந்து அப்துல் ஹமீது இறந்து போனது தெரிய வந்தது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி ஒரத்தூரில் உள்ள நாகை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.