Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காணாமல் போன முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

வேடசந்தூர், ஜூலை 11: குஜிலியம்பாறை தாலுகா வடக்கு தளிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (85). இவரை காணவில்லை என கடந்த ஜூலை 8ம் தேதி இவரது மகன் பெருமாள் எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவ்வூரில் உள்ள ஒரு கிணற்றில் முதியவர் சடலம் கிடப்பதாத குஜிலியம்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து கயிறு மூலம் உடலை மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன பிச்சை என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.