Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமண புரோக்கர் ரயில் மோதி பலி

ஈரோடு, ஜூன் 4: ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ரயில்வே ஸ்டேஷன் தண்டவாள பகுதியில் ரயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் சேலம் மாவட்டம் கொங்கனாபுரத்தை சேர்ந்த திருமண புரோக்கரான புவனேஸ்வரன் (55) என்பதும், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.