Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு கைது

கடலூர், ஜூன் 26: கடலூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர். கடலூர் சைபர் கிரைம் போலீசில் ஏட்டாக பணிபுரிந்தவர் பாலமுருகன் (40). கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி சரண்யா (34). இவர் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் கைரேகை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் பாலமுருகனுக்கும், சரண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலமுருகன், சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பாலமுருகன், சரண்யாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பாலமுருகன் சரண்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யா, கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏட்டு பாலமுருகனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.