Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெம்மேலியில் பராமரிப்பு பணி 3 மண்டலங்களில் 30ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட திருவான்மியூர், பள்ளிப்பட்டு கோட்டூர் கார்டன். ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் ஓஎச்டி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம்,

பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் - துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில், வரும் 30ம் தேதி காலை 9 மணி முதல் வரும் 1ம் தேதி காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.