Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை அக். 24: மதுரையை சேர்ந்த இரு வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை, நாராயணபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் லிங்கராஜ் (20). இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து லிங்கராஜை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதேபோல், மதுரை நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வல்லரசு (26). இவர் பொதுமக்களுக்கு காயம் ஏற்படுத்தி வழிப்பறி செய்யும் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

அவரை போலீசார் கண்காணித்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைளில் ஈடுபடுவது உறுதியானது. இதனால் அவரது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன்படி வல்லரசுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.இதன்படி கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.