சோழவந்தான், அக். 18: சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி விஜயா(53). இவர் கடந்த 14ம் தேதி மதுரை, பெரியார் நிலையத்தில் இருந்து மன்னாடி மங்கலம் செல்லும் அரசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகபுரம் காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஓடும் பேருந்திலிருந்து திடீரென தவறி சாலையோரம் விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

