கள்ளிக்குடி, செப். 16: கள்ளிக்குடி தாலுகா, வில்லூர் அருகேயுள்ளது கவசக்கோட்டை. இந்த ஊரைச் சேர்ந்த ராமநாதன் மனைவி அமராவதி (70). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கந்தசாமி மகன் கோவிந்தன். இவரது மனைவி பூவாயி. இரு குடும்பத்தினர் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் கடந்து செல்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று கோவிந்தன், பூவாயி ஆகியோர் அமராவதியை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வில்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கணவன், மனைவியைத் தேடி வருகின்றனர்.
+
Advertisement