மதுரை, அக். 13: வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் சோழவந்தானை அடுத்த முள்ளிபள்ளம் தடுப்பணையிலிருந்து துவங்கும் நிலையூர் கால்வாய் வழியாக பாணாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியங்குளம், குறுகட்டான், நெடுங்குளம், பெருங்குடி கண்மாய்கள் மற்றும் கம்பிக்குடி நீட்டிப்பு கால்வாய்களுக்கு செல்கிறது. இக்கால்வாய்களில் தென்கரை துவங்கி சுமார் 15 கி.மீ தூரத்திற்கு ரூ.13.50 கோடியில் தாழ்வான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.எனினும், அச்சம்பத்து பகுதியில் புல்லூத்து பிரிவு பாலம் முதல் மதுரை - கன்னியாகுமரி சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை சந்திப்பு வரை பல இடங்களில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கும் மேல் கால்வாயின் பல இடங்களில் புதர்மண்டி கிடக்கிறது. இதனால், ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் ஓட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நீர்திறப்பிற்கு முன் கால்வாயை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து ள்ளது.
+
Advertisement