மதுரை, செப். 9: மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்பான தற்காலிக உரிமம் பெற பலரும் விரும்புகின்றனர். இவர்கள் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 பிரிவு 84ன் கீழ் அரசின் நடைமுறைகளை பின்பற்றி செப்.20ம் தேதிக்குள் அதற்கான விண்ணப்பங்களை இ சேவை மையங்கள் உதவியுடன் இணைய வழியாக அனுப்ப வேண்டும்.
கடை வரைபடம், கிரைய ஆவணங்கள், உரிமக் கட்டணம் ரூ.600ஐ அரசு கணக்கில் செலுத்தியதற்கான ரசீது (அசல்), முகவரி சான்று, உள்ளாட்சி ரசீது மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். செப்.20க்கு பின் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.