மதுரை, அக்.8: குறுக்கே பைக்கில் வந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியதால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மதுரையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் இன்பா. இவர் நண்பர்களுடன் கோரிப்பாளையத்தில் இருந்து வைகை தென்கரை பிரதான சாலையில் அதிவேகமாக சொகுசு காரில் நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவர் மீது மோதி விடகூடாது என்பதற்காக சடன் பிரேக் பிடித்தார்.
அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் லேசாக உரசி சாலை நடுவே உள்ள சென்டர் மீடியேட்டரில் கார் மோதியது. அப்படியே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் அடிப்பட்ட தெய்வந்திரன் என்ற முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த காரை ராட்சத இயந்திரம் மூலம் மீட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஏற்பட்டது.