Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

சோழவந்தான், அக். 29: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கம்மாள் (81). திருமணமாகாத இவர், கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி. இவரது உறவினரான மகேஸ்வரி என்பவரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். கடந்த 23ம் தேதி மாலை வீட்டின் அருகே படுத்திருந்த ராக்கம்மாள் மீது, சில மர்ம நபர்கள் மண்ெணண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடலில் பற்றிய தீயால் ஏற்பட்ட காயங்களுடன் அவர் அலறித் துடித்தார். அருகில் இருந்தவர்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராக்கம்மாள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவந்தான் போலீசார், மூதாட்டி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.