Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

லாரி டிரைவர் தொழிலாளி திடீர் மாயம்

ஊத்தங்கரை, ஜூன் 27: ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (33), லாரி டிரைவர். இவர் கடந்த 11ம் தேதி பணிக்கு சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தம்பி ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி அடுத்த சின்ன தாளாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (53), கூலி தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி, கூலி வேலைக்கு சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அவர் கிடைக்காததால் இதுபற்றி, நேற்று முன்தினம் அவரது மகன் சக்திவேல் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.