Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குழந்தை இல்லாத ஏக்கம்: டிரைவர் தற்கொலை

திருமங்கலம், பிப்.27: குழந்தையில்லாத ஏக்கத்தில் அருப்புக்கோட்டை லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை அருகேயுள்ள நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(32). லாரி டிரைவரான இவர், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுக்கோட்டையை சேர்ந்த திவ்யா என்பரை திருமணம் செய்து நமச்சிவாயபுரத்தில் வசித்து வந்தார். போதிய வருமானம் இல்லாமல் அதிக அளவில் கடன் வாங்கியதால் மனவிரக்தியடைந்த அவர், மனைவியுடன் நடுக்கோட்டைக்கு கடந்த நான்கு மாத்திற்கு முன்பு குடிவந்தார். இவர்களுக்கு குழந்தையில்லை. இதனால் மனவிரக்தியில் பாலமுருகன் இருந்து வந்தார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வீடு திரும்பிய அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். மனைவி திவ்யா விசாரித்தபோது, குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்ததாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த் திவ்யா கணவரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பாலமுருகன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது தற்கொலை குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.