Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்திரசூடேஸ்வரர் கோயிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

ஓசூர், நவ.27: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் உண்டியலில் ரூ.24 லட்சம் காணிக்கையை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். ஓசூரில் உள்ள சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு முன்னிலையில், கோயிலில் உள்ள 8 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், கல்லூரி மாணவர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 உண்டியல்களிலும் ரூ.24 லட்சத்து 10 ஆயிரத்து 654 பணமும், 12 கிராம் தங்கம், 149 கிராம் வெள்ளி இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின் போது, கோயில் செயல் அலுவலர் சின்னசாமி, சரக ஆய்வர்கள் சக்தி (ஓசூர்), காவேரிப்பட்டணம் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.