கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் எஸ்ஐ ராஜா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார்(35), ரமேஷ்(52), ஆனந்தன்(31), ராமச்சந்திரன்(39), அன்பு(50) என தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1,200 பணத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement