Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே, தேவசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சீதா மற்றும் அலுவலர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ.2500 மதிப்புள்ள 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து, கேஆர்பி டேம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.